திருச்சியில் பயங்கரம்.! தலையில் கல்லை போட்டு கொடூரமாக வியாபாரி கொலை.! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் வியாபாரி தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த கொக்குவெட்டியான் கோவில் அருகே உள்ள பனைமரத்தடியில் தலையில் காயத்துடன் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக முசிறி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், இறந்து கிடந்தவரின் அருகே ரத்த கரையுடன் பெரிய கல் ஒன்று கிடந்ததால் அவரை யாரும் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் உயிரிழந்து கிடந்தவர் மலையப்பபுரம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (42) என்பதும், அவர் பன்றி இறைச்சி கடை வைத்து வியாபாரம் செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் செல்வராஜின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The merchant was murder by throwing a stone on his head in Trichy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->