வீட்டின் முன் தூங்கிய ஓட்டுநர் சரமாரியாக வெட்டிக்கொலை.! திருச்சி அருகே பயங்கரம்..! - Seithipunal
Seithipunal


திருச்சி மாவட்டத்தில் வீட்டு முன்பு தூங்கிக் கொண்டிருந்த ஓட்டுநரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், தாழகுளத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் டிரைவர் தங்கபாண்டியன்(31). இவர் நேற்று மாலை கட்டிலில் வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு வந்த மர்ம நபர்கள் தங்கபாண்டியனை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக தங்கபாண்டியன் உயிரிழந்தார்.

இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிர் இழந்த தங்கபாண்டியனின் உடலாய் பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தங்கபாண்டியனை வெட்டிக் கொன்றவர்கள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The driver was hacked to murder in Trichy


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->