தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு திமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் : அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!
The DMK government must come to power again for the development of Tamil Nadu: Minister Geethajeevans statement
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழா்களின் நலன் காக்கவும் திமுக ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என சபதம் ஏற்று பணியாற்றுங்கள் பாக முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா்.
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திரேஸ்புரம் பகுதி திமுக பாக முகவர்கள் கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. மாநகர திமுக ஆனந்தசேகரன் தலைமை வகித்தாா். பகுதி செயலாளரும் மண்டலத்தலைவருமான நிர்மல்ராஜ் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சா் கீதாஜீவன் பேசுகையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான ஸ்டாலின் பொறுப்பேற்ற பின் தோ்தல் வாக்குறுதியில் கொடுத்த வாக்குறுதிகள் 90 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதி உள்ளவைகளும் விரைவில் நிறைவேற்றப்படும்.
இப்படி எல்லா மக்களும் நன்மையடைய வேண்டும். என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழா்களின் உாிமைக்கும் பாதுகாப்பாக இருக்கும் முதல்வர் ஆட்சி மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கேற்றாற்போல் பணியாற்றுங்கள் உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட கழகம் முழுமையாக செய்து கொடுக்கும் என்று பேசினாா்.
கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின், பொருளாளர் ரவீந்திரன், மாநில பேச்சாளர் சரத்பாலா, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணிகண்ணன், அருணாதேவி, பிரபு, நாகராஜன், நிக்கோலாஸ்மணி, மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமாா், பழனி, மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தா் மற்றும் மணி, அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனா்.
English Summary
The DMK government must come to power again for the development of Tamil Nadu: Minister Geethajeevans statement