சிறுமி பலாத்கார வழக்கில், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த கடலூர் போக்சோ நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தை சேர்ந்த13 வயது சிறுமியை இவரது பாட்டி நெய்வேலி அருகே உள்ள அரங்கமங்கலம் பகுதியை சேர்ந்த ரவிசங்கர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுப்பதாக கூறியுள்ளார்.

பின்னர் நாளடைவில் சிறுமியின் பாட்டி உயிரிழந்த நிலையில், இதை பயன்படுத்தி ரவிசங்கர் அந்த சிறுமியை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததை சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் ரவிசங்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் அவர் மீது கடலூர் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சாட்சிகள் விசாரணை நடந்து வந்த நிலையில், ரவிசங்கர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50000 அபராதமும்  விதித்து, இந்த வழக்கில் நீதிபதி லட்சுமி ரமேஷ் தீர்ப்பு கூறினார்.  மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.7 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Cuddalore POCSO court sentenced the accused to 20 years in prison in the case of rape of a girl


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->