தனியார் மருத்துவமனையில் முதல்வருக்கு நுரையீரல் பரிசோதனை..! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நுரையீரல் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், நேற்று இந்த பரிசோதனை நடந்துள்ளது.

உடல் பரிசோதனைக்காக, ஸ்டாலின் நேற்று காலை, 9:00 மணிக்கு, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு நுரையீரல் செயல்பாடு தொடர்பான நவீன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

அத்துடன் அவருக்கு சி.டி., ஸ்கேன் பரிசோதனையும் நடந்துள்ளது. உடல் பரிசோதனைகள் முடிந்து, முதல்வர் அங்கிருந்து 10:00 மணிக்கு புறப்பட்டு, நேரடியாக தலைமைச் செயலகம் சென்றுள்ளார். மேலும்,  அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். இந்த பரிசோதனைகள் பற்றி கூறுகையில், இது வழக்கமான பரிசோதனை தான் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Chief Minister underwent a lung test at a private hospital


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->