முதல் தானியங்கி துறைமுகம்: இன்று நாட்டுக்கு அர்ப்பணிப்பணிக்கிறார் பிரதமர் மோடி!
PM Modi to dedicate Indias first self propelled port today
விழிஞ்ஞம் துறைமுகத்தின் அதிகாரபூர்வ தொடக்க விழாவில் இன்று துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்காக பிரதமர் மோடி.
அதானி குழுமத்துடன் இணைந்து சர்வதேச துறைமுகம் திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த துறைமுகத்தில் கடந்த வருடம் செயல்பாட்டுக்கு வந்த சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.தற்போது வரை பல்வேறு நாடுகளில் இருந்தும் சரக்கு கப்பல்கள் இங்கு வந்து கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில் விழிஞ்ஞம் துறைமுகத்தின் அதிகாரபூர்வ தொடக்க விழா இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இந்த திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று மாலை 7.35 மணியளவில் தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்த அவர் இரவு கவர்னர் மாளிகையில் தங்கினார்.
இதையடுத்து இன்று நடைபெறும் தொடக்கவிழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பணிக்கிறார்.விழாவுக்கு மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி சார்பானந்த சோனாவால் தலைமை தாங்குகிறார். கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் பலர் விழாவில் கலந்து கொள்கின்றனர்.இதற்காக காலை காரில் விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் விழிஞ்ஞம் செல்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு விழிஞ்ஞத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன
திறப்பு விழாவை முன்னிட்டு எம்எஸ்சி நிறுவனத்தின் மிகப்பெரிய சரக்கு கப்பலான செலஸ்டீனோ மரெஸ்கா விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு வந்தது.
English Summary
PM Modi to dedicate Indias first self propelled port today