விபத்தில் சிக்கியவர்களை தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த துணை மேயர்! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர், புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று மாலை 2 இரு சக்கர வாகனங்கள் எதிர்பாராதவிதமாக மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் 2 பள்ளி குழந்தைகள் உட்பட 4 பேர் பலத்த காயமடைந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி காயமடைந்தவர்களை கண்டு உடனடியாக காரை நிறுத்தி பள்ளி குழந்தைகள் மற்றும் காய வடைந்தவர்களை மீட்டு தனது காரில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

மேலும் அவசர ஊர்தி மூலம் காயமடைந்த மற்றொரு நபரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். 

விபத்தில் சிக்கிக் கொண்டவர்களை தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களை நேரில் சென்று நலம் விசாரித்த துணை மேயர் செயலை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thanjavur deputy mayor took injured car and sent hospital


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->