தஞ்சை அரசு மேல்நிலைப்பள்ளியில் 43 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை!  - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர்: பாப்பாநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் 43 மாணவிகள் கணித ஆசிரியர் மீது பாலியல் புகார் அளித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று சைல்டு லைன் அதிகாரிகள் பள்ளிகளில் விசாரணை மேற்கொண்ட நிலையில், தலைமறைவாக உள்ள ஆசிரியர் முத்துக்குமரனை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும், பாலியல் புகாருக்கு ஆளாகியுள்ள ஆசிரியர் முத்துக்குமரனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

₹25 லட்சம் இழப்பீடு ரத்து!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2013ம் ஆண்டு தனியார் பள்ளியில் சக மாணவன் கல்லால் தாக்கியதில் மாணவனின் கண் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டது.

இதற்க்கு தமிழக அரசு ₹25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு தடை விதித்துள்ளது.

மேலும், கல்வித்துறை அதிகாரிகளால்தான் இந்த சம்பவம் நடந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே ₹25 லட்சம் இழப்பீடு வழங்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக இரு நீதிபதிகளின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thanjavur 43 school girl Abuse complaint


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->