சிவகங்கை : பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது.!
teacher arrested for sexuall harassment case in sivakangai
சிவகங்கை : பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது.!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மதகுப்பட்டி அருகே இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக மதுரை மாவட்டம் கீழையூரை சேர்ந்த விநாயக சவுத்தி என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் பள்ளியில் பயின்று வரும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுவதுடன், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாகவும் பள்ளி மாணவிகள் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த புகாரின் படி பள்ளிக்கு சென்ற குழந்தைகள் நல அலுவலர்கள், பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அதில், ஆங்கில ஆசிரியர் விநாயக சவுத்தி மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்தது உறுதியானது.
இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியர் விநாயக சவுத்தி மீது புகார் அளித்துள்ளனர். அதன் படி போலீசார் ஆங்கில ஆசிரியர் விநாயக சவுத்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பேரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
teacher arrested for sexuall harassment case in sivakangai