சாத்தூர் அருகே மதுபானக் கடை ஊழியர் வெட்டிக் கொலை.! - Seithipunal
Seithipunal


சாத்தூர் அருகே மதுபானக் கடை ஊழியர் வெட்டிக் கொலை.!
 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பேருந்து நிலையத்தின் பின்புறம் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடை அருகே தனியாருக்கு சொந்தமான பார் ஒன்று உள்ளது. அங்கு இருக்கன்குடி பகுதியை சேர்ந்த காந்திராஜன் என்ற இளைஞர் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று அவர் வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அவரை திடீரென அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பித்துச் சென்றுள்ளனர். இதனால், பலத்த காயம் அடைந்த காந்திராஜன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார்.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் காந்திராஜனை உடனடியாக மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் சம்பவ பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில் குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது நத்தத்துபட்டியை சேர்ந்த மகாலிங்கபூபதி, பிரபு உள்ளிட்ட இரண்டு இளைஞர்கள் தான் என்பது தெரியவந்தது.

அவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தை அடுத்து நத்தத்துபட்டி, இருக்கன்குடி உள்ளிட்ட கிராமங்களில் பாதுகாப்பு பணிக்காக போலீஸார் குவிக்கபட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tasmac employee murder in saththur


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->