மீண்டும் அராஜகம்! ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது! - Seithipunal
Seithipunal


ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 8 மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த இம்மீனவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்களை கைது செய்ததோடு, பயன்படுத்திய ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இது தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையின் தொடர்ச்சியான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

சமீபத்தில் தமிழக மீனவர்கள் கைது சம்பவங்கள் அதிகரித்து வருவதால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இரு நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu fisherman arrest Srilankan Navy 


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->