மணிக்கு 150 கி.மீ வேகத்தில் தமிழகத்தை தாக்கும் நிவர் புயல்.! தமிழ்நாடு வேதர்மன் அதிர்ச்சி அறிவிப்பு.!
tamil nadu weather man report
வங்க கடலின் மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவாகியுள்ளது. வரும் 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த புயலுக்கு நிவர் என்ற பெயரும் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிவர் புயல், மகாபலிபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது எனத் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த நிவர் புயல் குறித்து, 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் தனது இணையதளத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், இந்த நிவர் புயல் வலுவிழந்த புயலாக மாறி, டெல்டா பகுதியான, வேதாரண்யம் முதல் காரைக்கால் இடையே வரும் 24, 25-ம் தேதிகளில் கரை கடக்கக் கூடும். அப்போது மணிக்கு சராசரியாக 70 கி.மீ வேகத்தில் கற்று வீசக்கூடும்.
இதன்காரணமாக, திரூவாரூர், நாகை, தஞ்சாவூர், பெரம்பரலூர், அரியலூர், காரைக்கால் மாவட்டங்களில் அதீத கனமழையும், திருவாரூர், திருச்சி, நாமக்கல், சேலம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், கடலூர், புதுச்சேரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.
அதே சமயத்தில், இந்த நிவர் புயல் வலுவான புயலாக மாறி காரைக்கால் - சென்னை இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. அப்படி ஒருவேளை நடந்தால், 25-ம் தேதி அன்று புயல் கரை கடக்கும். சுமார் 150 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதீதகனமழையும், கள்ளக்குறிச்சி, நாகை, காரைக்கால், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்." என்று 'தமிழ்நாடு வெதர்மேன்' பிரதீப் ஜான் தனது இணையதளத்தில் விளக்கமளித்துள்ளார்.
English Summary
tamil nadu weather man report