வெண்கல பதக்கம் வென்ற தமிழ்நாட்டு வீரர்! தடைகளைப் போட்டியில் 3வது இடம் பிடித்த செர்வின் செபாஸ்டியன்
Tamil Nadu athlete wins bronze medal Chervin Sebastian finishes 3rd in hurdles competition
தென்கொரியாவின் குமி நகரில் இன்று முதல் 31-ந் தேதி வரை, 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. இதில் 43 நாடுகளை சேர்ந்த 2000 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இப்போட்டியில் இந்திய அணி சார்பில் 59 பேர் கலந்து கொண்டனர். அதிலும் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த 9 பேர் பங்கேற்றுள்ளனர்.இந்த நிலையில் இன்று 20 கி.மீட்டர் நடைப்பந்தய போட்டி நடைபெற்றது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த செர்வின் செபாஸ்டியன் 3-வது இடத்தைப்பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அவர் பந்தய தூரத்தை 1 மணி நேரம் 21 நிமிடங்கள் 13 விநாடிகளில் கடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து தமிழக தலைவர்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.
English Summary
Tamil Nadu athlete wins bronze medal Chervin Sebastian finishes 3rd in hurdles competition