சிதம்பரத்தில் நாட்டு வெடி கூடம் வெடித்து பெண் தொழிலாளி உயிரிழப்பு!
chidambaram local crackers blast
சிதம்பரம் அருகே சம்பந்தம் கிராமத்தில் உள்ள நாட்டு வெடி தயாரிக்கும் கூடத்தில் இன்று காலை ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளி லதா (வயது 37) உயிரிழந்தார்.
வெடி விபத்தின் தாக்கத்தில் அந்தக் கூடம் முழுவதுமாக இடிந்து தரைமட்டமாகியது.
விபத்து குறித்து தகவல் அறிந்த கடலூர் மாவட்ட எஸ்பி எஸ். ஜெயக்குமார், சிதம்பரம் டிஎஸ்பி அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர்.
மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
English Summary
chidambaram local crackers blast