ரூ.30 ஆயிரம் கோடி சொத்து! பங்கு கேட்டு நீதிமன்றம் சென்ற நடிகை கரிஷ்மா கபூரின் வாரிசுகள்!
Actor Karisma Kapoor kids Delhi HC father assets
நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் மற்றும் மறைந்த தொழிலதிபர் சஞ்சய் கபூரின் சொத்து விவகாரம் தொடர்பாக அவரது வாரிசுகள் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
சஞ்சய் கபூர் மற்றும் கரிஷ்மா கபூர் தம்பதிக்கு சமைரா, கியான் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கான உரிமையை உறுதி செய்யும் வகையில், சஞ்சய் கபூரின் சுமார் 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளில் பங்கு கோரி இருவரும் இன்று (செப்டம்பர் 9) மனு தாக்கல் செய்துள்ளனர்.
கரிஷ்மா கபூர் மற்றும் சஞ்சய் கபூர் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, இருவரும் முன்னதாகவே விவாகரத்து பெற்றனர். பின்னர், சஞ்சய் கபூர் ப்ரியா சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் பிறந்தார்.
இதற்கிடையில், சஞ்சய் கபூர் கடந்த ஜூன் 12 அன்று பிரிட்டனில் திடீரென உயிரிழந்தார். அவர் மரணத்திற்குப் பின்னர், அவரது சொத்துகளின் உரிமையைச் சுற்றிய விவகாரம் தீவிரமாகியுள்ளது.
சமைரா மற்றும் கியான் தாக்கல் செய்த மனுவில், தாங்கள் உயிர்ப்பிள்ளைகளாக இருப்பதால் சட்டப்படி உரிய பங்கு கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரிக்க தில்லி உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், அடுத்த கட்ட விசாரணை நாளை தீர்மானிக்கப்படவுள்ளது.
English Summary
Actor Karisma Kapoor kids Delhi HC father assets