அடுத்த அதிர்ச்சி வீடியோ! புனேவில் பாலம் இடிந்து விபத்து! ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சுற்றுலாப் பயணிகள்! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிராவின் புனே மாவட்டம் குண்ட்மாலா பகுதியில் உள்ள 30 ஆண்டுகளான பழைய இரும்புப் பாலம் இன்று மதியம் 3.30 மணிக்கு இடிந்து விழுந்தது. இந்திராயணி ஆற்றின் மீது அமைந்திருந்த பாலம் இடிந்ததில், பாலத்தில் நின்றிருந்த பல சுற்றுலாப் பயணிகள் தண்ணீரில் விழுந்தனர்.

இதில் ஒருவர் உயிரிழந்ததை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். மேலும் பலர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

சம்பவத்தையடுத்து போலீசும், தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் (NDRF) விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பாலம் இடிந்த போது, சுமார் 100 பேர் மேல் இருந்ததாக மாளவ் தொகுதி எம்எல்ஏ சுனில் ஷெல்கே தெரிவித்தார்.

சிலர் நீரில் விழுந்தபின்னர் உயிருடன் கரை சேர்த்ததாகவும், மீதமுள்ளவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pune bridge collapse Tourists viral video


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->