ஆபரேஷன் சிந்தூர் 2.O தயாராகும் இந்திய இராணுவம்! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் நகரில் கடந்த ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 நிர்பராத பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டை உலுக்கியது. இதன் பின்னர், மே 7 அன்று இந்திய இராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

அதன்பின், இரு நாடுகளின் ராணுவ உயர் அதிகாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதில், மே 10 அன்று இருதரப்பு மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எனினும், இந்திய இராணுவம் முழுமையான தீர்வுக்காக தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளும் என அறிவித்தது.

இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு உத்தரகாண்ட் மாநிலத்தின் பித்தோர்கர் மாவட்டத்தில் உள்ள ராணுவ வீரர்களை சந்தித்த இந்திய இராணுவத் தளபதி உபேந்திர திவேதி, “தேசத்தை முன்னேற்றும் பணியில் இந்திய இராணுவம் முதன்மைப் பங்காற்ற வேண்டும். மக்கள் நம்பிக்கையின் முதன்மை தூணாக நம்மை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

அவர் மேலும், “ஆபரேஷன் சிந்தூர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், அதன் நோக்கம் நிறைவேறும் வரை நடவடிக்கை தொடரும். தற்போது ‘ஆபரேஷன் சிந்தூர் 2.0’ நடவடிக்கைக்காக ராணுவம் தீவிரமாகத் தயாராகி வருகிறது. பயங்கரவாதத்துக்கு எந்தவித சலுகையும் அளிக்கமாட்டோம்” என்றும் வலியுறுத்தினார்.

இந்த அறிவிப்பால், இந்திய இராணுவம் மீண்டும் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பு அதிகரித்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Operation Sindoor Indian Army Diwali 


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->