சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி கங்காபூர்வாலா பதவி ஏற்றார்..!! - Seithipunal
Seithipunal


சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 8 மாதங்களாக பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த டி.ராஜா கடந்த மே 24ஆம் தேதியோடு பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் 2வது மூத்த நீதிபதியான எஸ். வைத்தியநாதனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து மே 25ம் தேதி முதல் பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்கப்பூர்வாலா நியமிக்கப்பட்டார். இவர் மும்பை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றி வந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருந்த நிலையில் குடியரசுத் தலைவர் இதற்கான உத்தரவை பிறப்பைத் திறந்தார்.

சென்னை உயர்நீதி மன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காப்பூர்வாலா பதவியேற்பு நிகழ்ச்சி இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தின் 33வது தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா பதவியேற்றுள்ளார். அடுத்த ஆண்டு மே மாதம் சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா பதவியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் ரகுபதி, தங்கம் தென்னரசு, சேகர்பாபு மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

SV Gangapurwal sworn in as new Chief Justice of ChennaiHC


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->