திருச்சி || பள்ளிக்கு சென்ற மாணவிக்கு நேர்ந்த சோகம்..!
Student in Accident
பள்ளி சென்று கொண்டிருந்த மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், காசிக்கடை பகுதியைசு; சேர்ந்த முருகேசன். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும் மகளும் உள்ளனர். இவரது மகள் ஸ்ரீவேதநாயகி அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் தனது சகோதரருடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்ற்படுத்தியுள்ளது.