சட்டமன்றத்தில் யாரோ எழுதிக் கொடுப்பதை வாசிப்பதோடு தன் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறாரா பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர்? அதிமுக!
ADMK condemn to cm vijay
அதிமுக விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை, கோவையில் இளம் பெண் சடலமாக மீட்பு எனத் தமிழகத்தில் தொடர்ச்சியாக அரங்கேறும் கொடூரச் சம்பவங்கள், தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருப்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றன.
சட்டமன்றத்தில் யாரோ எழுதிக் கொடுப்பதை வாசிப்பதோடு தன் கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறாரா பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர்?
பெண்கள் பாதுகாப்பு என்பது வெறும் காகிதத்தில்தான் இருக்கிறதா? சட்டமன்றத்தில் ரீல்ஸ் எடுப்பதற்காக ஒத்திகை பார்க்கும் நேரத்தைப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் செலவிடுங்கள்