மனிதாபிமான உணர்வுடன் சிறுமிகளை தொட்டு தூக்கி முதலுதவி செய்ததை இழிவுபடுத்துவதா? அன்பில் மகேஷுக்கு அமைச்சர் கண்டனம்! - Seithipunal
Seithipunal


உயர்கல்வி துணை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாரத்தானில் பங்கேற்ற சிறுமிகள் வெயிலால் மயக்கமடைந்த நிலையில் அவர்களுக்கு முதலுதவி செய்தேன்.

மனிதாபிமான உணர்வுடன் சிறுமிகளை தொட்டு தூக்கி மயக்கத்தை போக்க தண்ணீர் தெளித்து முதலுதவி செய்ததை இழிவுபடுத்துவதா?

மனிதாபிமான செயலை இழிவுபடுத்தி திமுக ஐடி விங்கில் அன்பில் மகேஷ் பதிவு செய்திருப்பது அநாகரீக செயல்.

அமைச்சராக இருந்தபோது அன்பில் மகேஷ் செய்த ஊழல்கள் தனியார் பள்ளி கூட்டமைப்பின் தலைவர் அளித்த பேட்டியில் உறுதியாகி உள்ளது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குறிப்பாக தலித் சமூகத்தின் பிரதிநிதியாக அமைச்சரவையில் இருக்கும் என்னை நோக்கி அவதூறு செய்யப்படுகிறது.

அநாகரீகமான விமர்சனங்கள் மூலம் அன்பில் மகேஷ் அவரது தரத்தை தான் குறைத்துக் கொண்டுள்ளார்.

விமர்சனங்கள் மூலம் என்றும் எங்களை வெல்ல முடியாது என உறுதியாக கூறுகிறேன்.

இதுபோன்ற தரம்தாழ்ந்த விமர்சனங்களை முன்வைத்தால் அதற்குரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cong minister condemn to dmk anbil


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->