திமுக கூட்டணி கட்சிக்காரர்களால், கற்பழிக்கப்பட்ட பெண்.! வாய் திறக்காத அரசியல் கட்சிகள்.!
stalin did not speech about cuddalure pregnant lady rape case
இந்தியாவில் இருக்கும் அனைத்து கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் ஐதராபாத் பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கொந்தளித்தனர். ஆனால், தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம் அருகே கர்ப்பிணி பெண்ணை நான்கு சிறுவர்கள் பாலியல் கொடுமை செய்த சம்பவம் குறித்து இதுவரை எந்த ஒரு அரசியல்வாதியும் குரல்கொடுக்கவில்லை.
கடலூரைச் சேர்ந்த இரு பெண்கள் தங்களுடைய கணவருடன் திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருந்த பொழுது நான்கு பேர் அந்தப் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். இதன் காரணமாக அந்தப் பெண்களின் கணவர்கள் கண்டித்து இருக்கின்றனர். எனவே அந்த ரவுடி கும்பல் இருவரையும் அடித்து நொறுக்கி இருக்கின்றது.
பின்னர் ஒரு பெண்ணை மட்டும் கடத்திச் சென்று 5 மாத கர்ப்பிணி என்று கூட இறக்க படாம விடியவிடிய அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து தூக்கி எறிந்து இருக்கின்றனர். இதன் காரணமாக அவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து வழக்கு செய்யப்பட்டு பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அந்த காரில் பிரபல அரசியல் கட்சியின் கொடி இருந்ததாகவும் அதில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறை விசாரணையில் குற்றவாளிகள் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதால் ஸ்டாலின் உள்ளிட்ட எவருமே இது குறித்து வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
stalin did not speech about cuddalure pregnant lady rape case