சிவகங்கை.! சொத்து தகராறில் தந்தையை கொலை செய்த மகன்.! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் சொத்து தகராறில் தந்தையை மகன் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் வெள்ளிகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி. இவருடைய மூத்த மகன் கூலி தொழிலாளி அய்யங்காளை.

சொத்து பிரிப்பதில் பழனியாண்டிக்கும் மூத்த மகன் ஐயங்காலைக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில் நேற்று இரவும் சொத்து தொடர்பாக தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த மகன் அய்யங்காளை, இன்று அதிகாலை வீட்டு வாசலில் உறங்கிக்கொண்டிருந்த தந்தையை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மானாமதுரை காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய அய்யங்காளையை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Son who hacked father to death in property dispute


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->