ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைத்து முடிக்க வேண்டும்..MLA நேரு வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதி உதவியுடன் அண்ணாசாலை பகுதியில் நடைபெற்று வருகின்ற கட்டிடப் பணிகளை உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து அப்பகுதி வியாபாரிகளுக்கு கடை வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். 
 
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட நகரப்பகுதியில் அமைந்துள்ள  அண்ணா திடல் விளையாட்டு மைதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள அண்ணா சாலை,லப்போர்த் வீதி,சின்ன சுப்பிராயபிள்ளை விதி போன்ற பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதி உதவியுடன்  கடைகள் புதிதாக கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்து அண்ணா சாலை பகுதியில் உள்ள கடைகளை தவிர்த்து லப்போர்த் வீதி,சின்னசுப்பராய பிள்ளை வீதி கடைகளுக்கு ஏற்கனவே   கடை நடத்தி வந்தவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடைகளின் உரிமம் வழங்கப்பட்டது.. மேலும் கடைகளின் சாவிகளும்  உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கட்டிடப் பணிகள் நிறைவடையாமல் இருந்த அண்ணா சாலை   பகுதியில் உள்ள கடைகளை விரைந்து கட்டி முடித்து முன்பு கடை நடத்தி வந்த  வியாபாரிகளிடம்  ஒப்படைப்பதற்காக..இன்று உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத்தலைவருமான திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் அண்ணாசாலை பகுதியில் நடைபெற்று வருகின்ற கட்டிடப் பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடித்து அப்பகுதி வியாபாரிகளுக்கு கடை வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். மேலும் ஆய்வின் போது ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரி திரு.ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள், அப்பகுதி வியாபாரிகள் பலர் உடன் இருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Smart city project works should be completed quickly MLA Nehrus insistence


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->