கணவரை சேர்த்து வைக்க மாந்திரிக வாதியை நாடிய இளம் பெண்..கடைசியில் நடந்த பரபரப்பு தகவல்!
A young woman who consulted a sorcerer to keep her husband the shocking news that unfolded in the end
பிரிந்த கணவரை சேர்த்து வைக்க மாந்திரிக வாதியை நாடிய இளம் பெண்ணை கொலைசெய்து உடலை கால்வாயில் வீசி சென்ற 4 பேரை 8 மாதங்களுக்கு பின்னர் போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் பழவூரை அடுத்த மாடன்பிள்ளை தர்மம் கிராமத்தை சேர்ந்த 28 வயதான இளம் பெண் கயல்விழிக்கு திருமணமாகி கணவரை பிரிந்து பெற்றோருடன் வாழ்ந்து வந்தார். 2024கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 5-ம் தேதி கோவிலுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற கயல்விழி மாயமானார். இதையடுத்து புகாரின்பேரில் பழவூர் போலீசார் வழக்குப்பதிவு கடந்த 8 மாதங்களாக தேடிய நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் பகுதியை சேர்ந்த சாமியாரான சிவசாமி என்பவம் கயல்விழியை காரில் அழைத்துச்சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தியபோது அவர் கயல்விழியின் 7 பவுன் நகைக்காக கூட்டாளிகளுடன் சேர்ந்து அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும் கயல்விழியின் உடலை சேரன்மகாதேவியில் 80 அடி அகல கால்வாயில் வீசிய அதிர்ச்சி தகவல் வெளியானது.
மேலும் கைதானவர்களின் நடத்திய விசாரணையில் . கயல்விழிக்கு கடந்த 2022-ம் ஆண்டு பெங்களூருவில் பணிபுரியும் ஒரு வாலிபருடன் திருமணம் நடந்தது.பின்னர் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் கணவரை பிரிந்து சொந்த ஊருக்கு வந்துவிட்டார். கணவரை பிரிந்த ஏக்கத்தில் இருந்த கயல்விழி பேஸ்புக்கில் தனது கணவரை சேர்ந்த வைக்க நல்ல மாந்திரீகம் செய்ய தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கீறீர்களா என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.
இதனை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மாயாண்டி ராஜா பார்த்து தனது ஆசைவலையில் வீழ்த்த பார்த்துள்ளார்.. கயல்விழி மாயாண்டி ராஜாவின் ஆசைக்கு உடன்படாததால் மாந்திரீகம் செய்யும் தனது மாமா சிவசாமியிடம் அழைத்துச்சென்று பணத்தை பறிக்க அவர் திட்டமிட்டு நம்பவைத்து பல்வேறு தவணைகளாக அவரிடம் இருந்து மொத்தம் ரூ.5 லட்சம் வரையிலும் சிவசாமி, மாயாண்டி ராஜா ஆகியோர் பறித்துள்ளனர்.ஒருகட்டத்தில் அவர்கள் ஏமாற்றுவதை அறிந்த கயல்விழி தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டு தொந்தரவு செய்தார். இதனால் சம்பவதன்று கயல்விழியை சிவசாமியும், அவருடைய சகோதரி மகனான மாயாண்டி ராஜா, வீர நல்லூரை சேர்ந்த கண்ணன், சிவனேஸ்வரி ஆகிய 4 பேரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
பின்னர் கயல்விழி அணிந்திருந்த 7 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு கயல்விழி உடலை காரில் எடுத்து சென்று சேரன்மகாதேவியை அடுத்த கங்கணாகுளம் அருகே மணிமுத்தாறு 80 அடி கால்வாயில் உடலை வீசிவிட்டு இயல்பான வாழ்க்கையை வாழ்ந்தது தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் தொடர்ந்து சிவனேஸ்வரியை கொக்கிரகுளம் மகளிர் சிறையிலும், மற்ற 3 பேரையும் பாளை மத்திய சிறையிலும் அடைத்தனர்.
English Summary
A young woman who consulted a sorcerer to keep her husband the shocking news that unfolded in the end