பரிகார பூஜை செய்யவந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பூசாரி.!
The priest sexually assaulted the woman who came to perform the remedy pooja
பரிகார பூஜை செய்வதாக கூறி பெண்ணை கோவில் பூசாரி மற்றும் ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் திருச்சூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் திருச்சூர் அருகே பெரிங்கோட்டில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ விஷ்ணு மாயா கோவிலுக்கு கேரளா மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் வந்து செல்கிறார்கள்.
இந்தநிலையில் பெங்களூரு அருகே உள்ள ஹரளூர் பகுதியை சேர்ந்த 38 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த கோவிலுக்கு குடும்ப பிரச்சினை தீர பரிகார பூஜை செய்வதற்காக வந்திருக்கிறார். அப்போது அந்த கோவிலின் தலைமை பூசாரியான உன்னி தாமோதரனை சந்தித்த அந்த பெண் தனது பிரச்சனையை தெரிவித்தார்.
இதையடுத்து தான் கூறும் நாளில் பூஜை செய்ய வருமாறு அந்த பெண்ணிடம் பூசாரி கூறினார். இந்தநிலையில் பெங்களூருக்கு திரும்பிச் சென்ற அந்த பெண், பூசாரியின் உதவியாளரான அருண் என்பவர் அழைத்ததன் பேரில் கேரளாவுக்கு வந்திருக்கிறார்.அப்போது கோவிலுக்கு அருகில் உள்ள கட்டிடத்துக்கு அந்த பெண்ணை அழைத்து சென்று பூசாரி மற்றும் அவரது உதவியாளர் அருண் ஆகிய இருவரும் சேர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்த பெண் பெங்களூரு பெலந்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததன்பேரில் விசாரணை நடத்த திருச்சூர் வந்த போலீசார் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறப்பட்ட கோவில் ஊழியர் அருணை கைது செய்தனர்.மேலும் தலைமறைவான தலைமை பூசாரி உன்னி தாமோதரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
The priest sexually assaulted the woman who came to perform the remedy pooja