செந்தில் பாலாஜி ED வழக்கு அப்டேட்: 50 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை நகல்! படிக்க நேரம் கேட்ட செந்தில் பாலாஜி சகோதரர்! - Seithipunal
Seithipunal


செந்தில் பாலாஜி தொடர்பான சட்டவிரோத பண பரிமாற்ற தடையின்கீழ் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், அவரது சகோதரர் அசோக்குமார் உள்பட 12 பேருக்கு இன்று (ஜூன் 9) கூடுதல் குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.

இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட முதன்மை குற்றப்பத்திரிகைக்கு தொடர்ந்து, ஜனவரி மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், முன்னாள் உதவியாளர் பி. சண்முகம் உள்பட 13 பேருக்கு குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 50,000 பக்கங்களைக் கொண்ட ஆவணங்களுடன் குற்றப்பத்திரிகை வழங்கப்பட வேண்டியது குறிப்பிடத்தக்கது.

இன்றைய விசாரணைக்காக குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராகினர். செந்தில் பாலாஜிக்கு ஏற்கெனவே நகல்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில், மீதமுள்ள 12 பேருக்கும் இன்று வழங்கப்பட்டன.

குற்றப்பத்திரிகையை முழுமையாக படிக்க கூடுதல் நேரம் தேவை என அசோக்குமார் உள்ளிட்ட 12 பேர் தரப்பில் அவகாசம் கோரியதால், நீதிபதி எஸ். கார்த்திகேயன் வழக்கை ஜூன் 23க்கு ஒத்திவைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Senthilbalaji ED Case update


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->