பட்டா மாற்ற 3 லட்சம் - கையும் களவுமாக சிக்கிய தாசில்தார்.!
RS mangalam thasildhar arrested for bribe
பட்டா மாற்ற 3 லட்சம் - கையும் களவுமாக சிக்கிய தாசில்தார்.!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ்.மங்கலம் அலுவலகத்தில் தாசில்தாராக பணிபுரிந்து வருபவர் தென்னரசு. இவரிடம் கருப்பையா என்பவர் தனது பெயரில் உள்ள இரண்டு ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்து தர விண்ணப்பித்துள்ளார்.
அதற்கு, தாசில்தார் தென்னரசு ரூ. 3,00,000 லஞ்சம் வேண்டும் என்று கேட்டு, அதில் முதல் தவணையாக ரூ. 1,00,000 கேட்டுள்ளார். ஆனால், லஞ்சம் கொடுக்க விரும்பாத கருப்பையா, ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கருப்பையாவிடம் கொடுத்து அனுப்பினர். அதன் படி கருப்பையா அந்தப் பணத்தைக் கொண்டு சென்று தாசில்தார் தென்னரசுவிடம் கொடுத்துள்ளார்.
அப்போது, அங்கே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறையினர் தாசில்தார் தென்னரசை கையும், களவுமாக பிடித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
RS mangalam thasildhar arrested for bribe