கனமழையால் தர்மபுரி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து... 1500 கன அடியாக அதிகரிப்பு...!
Heavy rains cause water inflow to Dharmapuri Okenakkal increased to 1500 cubic feet
கடந்த சில தினங்களாக, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக, தர்மபுரியிலுள்ள ஒகேனக்கலுக்கு நீர் வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது. இதில் நேற்றைய தினம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 1200 கனஅடியாக வந்தது.

இந்நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்துள்ளதால், இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 1500 கன அடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.
இதனால், மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.மேலும், சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகைக் கண்டு ரசித்தனர்.
கூடுதலாக, தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.அதன் பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
மேலும், மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிட்டனர்.இதில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
English Summary
Heavy rains cause water inflow to Dharmapuri Okenakkal increased to 1500 cubic feet