சென்னை விமான நிலையத்தில் ரூ.63 லட்சம் தங்கம் பறிமுதல்.! வாலிபர் கைது..! - Seithipunal
Seithipunal


சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 63 லட்சம் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் வாலிபர் ஒருவரை கைது செய்தனர்.

வெளிநாடுகளில் இருந்து சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு பெரும் அளவிலான தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து சுங்க இலாகா பிரிவு அதிகாரிகள் விமான பயணிகளிடம் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபர் ஒருவரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரித்தனர்.

இதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அவரது உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். இந்த சோதனையில், அவர் கொண்டுவந்த கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை பிரித்துப் பார்த்ததில் தங்க கட்டிகள் மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரிடம் இருந்த ரூபாய் 63 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ 165 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், வாலிபரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து இந்த தங்கம் கடத்தல் தொடர்பாக வாலிபரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rs 63 lakhs worth gold seized at Chennai airport


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->