புதுக்கோட்டை அருகே பரிதாபம்: தந்தை இறந்த துக்கம் தாங்காமல் மகன் விபரீத முடிவு! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் சக்தியசீலன். இவரது மகன் கமல்ராஜ் நாயகம் (வயது 47) சத்தியசீலன் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டதாக செய்தி கேட்ட கமல்ராஜ் மிகுந்த வருத்தத்தில் இருந்து வந்தார். 

இவரது குடும்பத்தினர் இலங்கையில் உள்ளதால் இவர் தனியாக முகாமில் இருந்து வந்தார். இதனால் இவருக்கு ஆறுதல் கிடைக்காமல் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். 

இந்நிலையில் கமல் ராஜ் வீட்டில் தனியாக இருந்தபோது மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். 

பின்னர் வலியால் கதறி துடித்தார். அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து சென்று தீக்காயம் அடைந்த அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று கமல் ராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை இறந்த துக்கத்தில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudukkottai father death his son committed suicide


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->