வேலூர் மருத்துவமனையில் இருந்து காணாமல் போன குழந்தை - போலீசார் அதிரடி.! - Seithipunal
Seithipunal


வேலூர் மருத்துவமனையில் இருந்து காணாமல் போன குழந்தை - போலீசார் அதிரடி.!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலm கிராமத்தை சேர்ந்தவர்கள் சுந்தர்-சூரியகலா தம்பதியினர். இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில், சூரியகலா 3-வது முறையாக கர்ப்பமானார். 

அதன் படி அவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பிரசவத்துக்காக கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அவர் குடும்ப கட்டுப்பாடு செய்வதற்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இந்த நிலையில், சூரியகலா நேற்று மதியம் அடையாளம் தெரியாத பெண்ணோடு உணவு சாப்பிட்டும், சிறிது நேரத்தில் மயக்கமடைந்தும் உள்ளார். சில மணி நேரத்திற்கு பிறகு சூரியர்களா மயக்கம் தெளிந்தபின் எழுந்தபோது குழந்தை காணாமல் போனதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். 

குழந்தைக் குறித்து அக்கம் பக்கத்தில் விசாரித்தும் குழந்தை கிடைக்காததால் சூரியகலா குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து மருத்துவமனை வார்டிலிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அதில் மொட்டை தலையுடன் உள்ள பெண் ஒருவர் குழந்தையை தூக்கி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி குழந்தையை மீட்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police rescue baby in kanchipuram


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->