சேலம் அருகே பயங்கரம்..! பெண் கொடூரமாக வெட்டிக்கொலை...! 2-வது கணவருக்கு வலைவீச்சு...!
Police investigation for Woman brutally murder in salem near
சேலம் மாவட்டத்தில் பெண் வெட்டி கொலை செய்யப்பட்டு வீட்டுக்குள் அழுகிய நிலையில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் சின்ன சீரகாபாடி பகுதியை சேர்ந்தவர் காளியம்மாள் என்கின்ற லட்சுமி (47). இவர் முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு மேட்டூர் பகுதியை சேர்ந்த ரகு என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை லட்சுமி வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது.
மேலும் லட்சுமியின் வீடு திறந்து கிடந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அழகிய நிலையில் கிடந்த லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் லட்சுமியின் தலை, வயிறு உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் இருந்ததால், அவரை யாரோ கொடூரமாக வெட்டி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதற்கிடையே லட்சுமியின் இரண்டாவது கணவர் ரகு தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதனால் லட்சுமி கொலைக்கும் கணவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இரண்டாவது கணவர் ரகுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Police investigation for Woman brutally murder in salem near