கட்டாத 39 தடுப்பணைக்கு பில்! பெரம்பலூரில் மொத்தமாக சிக்கிய 7 பேர்!  - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டம், மலையாளப்பட்டி ஊராட்சியில் தடுப்பணைகள் கட்டியதாக கூறி மோசடியில் ஈடுபட்டதாக, ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2019 - 2020 ஆம் ஆண்டு காலகட்டத்தில் ஆறு தடுப்பணைகளை மட்டுமே கட்டி விட்டு, சுமார் 45 தடுப்பணைகள் கட்டியதாக கோரி நிதி மோசடிகள் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 30.3 லட்சம் ரூபாய் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாகவும் பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பிடிஓ, இளநிலை பொறியாளர் நாகராஜன், ஓவர்சியர் மணிவண்ணன் உள்ளிட்ட ஏழு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், தனியார் ஒப்பந்ததாரர்கள் துரைசாமி, சதீஷ்குமார், வெற்றிவேல், ராணி ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Perambalur


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->