மக்களே! 6000 கன அடியாக குறைந்த தர்மபுரி ஒகேனக்கல் நீர்வரத்து...!
People Dharmapuri Hogenakkal water flow reduced to 6000 cubic feet
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது.இதைத்தொடர்ந்து கேரளா-கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு அவ்வப்போது நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.

இதில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7,500 கனஅடியாக வந்தது. இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழை குறைந்தது.இதனால், இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 6000 கன அடியாக தண்ணீர் குறைந்தது வந்தது.
இதில்,ஐந்தருவி,மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.மேலும், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடையணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
இதில்,தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.அதன் பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
மேலும், மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
English Summary
People Dharmapuri Hogenakkal water flow reduced to 6000 cubic feet