பனை மரத்திலிருந்து தவறிக் கீழே விழுந்த பெயிண்டர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


பனை மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த பெயிண்டர் உயிரிழந்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வாகைகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவரின் மகன் தனபால்(24) பெயிண்டர்.

இவர் நேற்று காலையில் ஊருக்கு அருகிலுள்ள சொக்கலிங்கம் என்பவரின் தோட்டத்தில் பனைமரத்தில் ஏறியுள்ளார். அப்போது திடீரென்று நிலைதடுமாறிய தனபால் மரத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த தனபால் அங்கிருந்தவர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால் தனபால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கயத்தாறு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Painter dies after falling from a palm tree


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?


செய்திகள்



Seithipunal
--> -->