பனை மரத்திலிருந்து தவறிக் கீழே விழுந்த பெயிண்டர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


பனை மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த பெயிண்டர் உயிரிழந்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள வாகைகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவரின் மகன் தனபால்(24) பெயிண்டர்.

இவர் நேற்று காலையில் ஊருக்கு அருகிலுள்ள சொக்கலிங்கம் என்பவரின் தோட்டத்தில் பனைமரத்தில் ஏறியுள்ளார். அப்போது திடீரென்று நிலைதடுமாறிய தனபால் மரத்திலிருந்து தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த தனபால் அங்கிருந்தவர்கள் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால் தனபால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கயத்தாறு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Painter dies after falling from a palm tree


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->