விரைவில்..............., தேனியில் சற்றுமுன் ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்று, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த தீர்ப்பில், ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இன்று மாலை தேனியில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் இடம் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்க்கு அவர், "எடப்பாடி பழனிசாமி அதிமுக தொண்டர்கள் அவர் பக்கம் இருப்பதாக சொலிக்கிறார். ஆனால், அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.

ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உரிய அறிக்கை விரைவில் வெளியிடப்படும்" ஓ பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OPS next move ADMk SC judgement EPS 2023


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->