கூடலூர் வனப்பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!!
One killed in firing in Gudalur forest
தேனி மாவட்டம் கூடலூர் அருகே குள்ளப்பா கவுண்டன்பட்டியில் ஈஸ்வரன் என்பவர் இரவு நேரத்தில் வயலை காக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் நேற்று இரவு வயல்வெளி ஒட்டிய வனப்பகுதிக்குள் அனுமதி இன்றி சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் வனத்துறையினருக்கும் ஈஸ்வரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஈஸ்வரன் வனத்துறையினரை தாக்கம் முயன்றதாக தெரிய வருகிறது. இதனால் ஈஸ்வரன் மீது வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துப்பாக்கி சூடு குறித்து தகவல் அறிந்த கூடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ஈஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வனத்து பயனர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் விவசாய தொழிலாளி உயர்ந்த சம்பவம் கூடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குள்ளப்பா கவுண்டன்பட்டி கிராம பொதுமக்களும் உறவினர்களும் தேனி அரசு மருத்துவமனையில் உள்ள ஈஸ்வரன் உடலை கம்பம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரவேண்டும் என கம்பம் மருத்துவமனையின் வாசலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கம்பம் அரசு மருத்துவமனை வளாகத்தில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனால் கம்பம் மருத்துவமனை சுற்றிலும் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
One killed in firing in Gudalur forest