மதுரையில் அதிர்ச்சி: 2 ஆண்டுகளாக தொடர்ந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை - சிக்கிய முதியவர் - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் பழங்காநத்தம், நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகநாதன்(65). இவர் அதே பகுதியில் வசித்து வரும் உறவுக்கார பெண் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இந்நிலையில் சண்முகநாதன், உறவுக்கார பெண்ணின் 10 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் சிறுமியிடம் இது பற்றி வெளியில் சொன்னால், கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். 

இதனால் பயந்துபோன சிறுமி இதுகுறித்து யாரிடமும் கூறவில்லை. இதைத்தொடர்ந்து சண்முகநாதன் கடந்த 2 ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சிறுமியின் குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து சிறுமியின் தாய் இது குறித்து மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் 10 வயது சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த சண்முக நாதனை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Oldman arrested for sexually harassing a girl in madurai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->