13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - போக்சோவில் முதியவர் கைது - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சவரிமுத்து(78). இவர் 13 வயதுடைய சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்பு சவரிமுத்து வீட்டில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனால் சிறுமி சத்தம் போடவே அப்பகுதியில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். இதையத்து அவர்கள் சிறுமியை மீட்டு தாயிடம் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து இது குறித்து சிறுமியின் தாய் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து சவரிமுத்துவை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Oldman arrested for sexually harassing 13 year old girl in Thoothukudi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->