சாலையை கடக்கும் முயன்ற மூதாட்டி.! இருசக்கர வாகனம் மோதி பலி.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி இருசக்கர வாகனம் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் நெரஞ்சிப்பேட்டை இந்திரா தெரு பகுதியை சேர்ந்தவர் மயிலியம்மாள். இவர் நேற்று மாலை நெருஞ்சிப்பேட்டை மேட்டூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது வீட்டிற்கு வருவதற்காக சாலையின் இடது புறம் இருந்து வலது புறமாக சாலையை கடக்க முயன்ற போது அம்மாபேட்டையில் இருந்து நெருஞ்சி ப்பேட்டை நோக்கி வந்த இருசக்கர வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக மயிலியம்மாள் மீது மோதியது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த மயிலியம்மாளை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மயிலியம்மாள் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த விபத்து குறித்து மயிலியம்மாளின் மகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Old woman killed in Twowheeler collision in erode


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->