சிவகங்கை : 3 மகன்கள் இருந்தும் கவனிக்கவில்லை - விரக்தியில் தந்தை தற்கொலை.!! - Seithipunal
Seithipunal


சிவகங்கை : 3 மகன்கள் இருந்தும் கவனிக்கவில்லை - விரக்தியில் தந்தை தற்கொலை.!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே வண்டல் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாசாமி. இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் மலேசியாவில் தொழில் அதிபர்களாக இருந்து வருகிறார்கள். 

இதனால், அய்யாசாமி மூன்று மகன்களும் தன்னை கவனிக்கவில்லை என்ற விரக்தியில் தனது குடும்பத்தினரிடம், தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவ்வப்போது தெரிவித்து வந்துள்ளார். 

இதனை அய்யாசாமியின் மகன்களோ, அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களோ இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த நிலையில் அய்யாசாமி காரைக்குடி பர்மா காலனி பகுதியில் உள்ள காட்டிற்குள் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டார். 

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அய்யாசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

old man sucide in sivakangai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->