தாலியை கூட கழற்ற சொன்னீர்களே? உங்கள் வீடுகளில் சோதனை நடத்தினால் என்ன? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி! - Seithipunal
Seithipunal


நீட் முறைகேடு குற்றவாளிகளுக்கு ஆதரவான அதிகாரிகளின் வீடுகளில் ஏன் சோதனை செய்யவில்லை என்றும், அப்படி சோதனை நடத்த ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்றும், அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பி உள்ளது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு நீட் தேர்வு ஆல்மாராட்ட வழக்கில் தன்னை விடுவிக்க கோரி தருண் மோகன் என்ற அதிகாரி தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த கேள்வியை எழுப்பி உள்ளது. 

மேலும், இந்த நிலை தொடர்ந்தால் முறைகேடு அதிகாரிகளை கைது செய்ய உத்தரவிட நேரிடும் என்றும், உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்தது.

வருகின்ற திங்கள்கிழமை இது குறித்து அறிக்கை தாக்கல் செய்வதாக மத்திய அரசு கூறியதை அடுத்து, இந்த வழக்கினை ஒத்திவைத்து உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்த வழக்கு விசாரணையின் போது, தமிழகத்தில் திருமணமான மாணவிகளின் தாலியை கூட கழற்ற சொல்லி சோதனை செய்தீர்கள் என்று கேள்வி கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்தியாவிலேயே இல்லாத ஒரு மாணவனுக்காக மூன்று மாநிலங்களில் மூன்று பேர் தேர்வு எழுதப்பட்டுள்ளதையும் சுட்டி காட்டினார். 

மேலும், ஆள்மாராட்டம் செய்து தேர்வு எழுதியவர்களின் ஆவணங்களை தேசிய தேர்வு முகமை தரவில்லை. குற்றவாளிகளுக்கு உடந்தையாக தேசிய தேர்வு முகமை அதிகாரிகள் செயல்படுகிறார்களோ என்ற சந்தேகத்தையும் எழுப்புவதாக சென்னை உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NEET Scam 2019 case


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->