காதலனின் துரோகம்... பச்சிளம் குழந்தை பலி...! குழந்தையைக் கொன்று தோப்பில் வீசிய செவிலியரின் கொடூர செயல்...!
betrayal lover death newborn baby cruel act nurse who killed child and threw grove
கன்னியாகுமரி மாவட்டத்தில் திருமணத்திற்கு வெளியே பிறந்ததாகக் கூறப்படும் பச்சிளம் ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் தென்னந்தோப்பில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த செவிலியர் ஒருவரிடம் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகர்கோவில் நாகராஜா கோவில் அருகே அமைந்துள்ள முதியோர் இல்லம் மற்றும் மருத்துவமனை வளாகத்தை ஒட்டிய தென்னந்தோப்பில், பிறந்து சில நிமிடங்களே ஆன ஆண் குழந்தை தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையில் உயிரிழந்து கிடந்ததை அப்பகுதியினர் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவலறிந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக காவலர்களுக்கு தகவல் அளித்தது.சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவலர்கள், குழந்தையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விசாரணையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்ததும், அவருக்கும் ஒரு இளைஞருக்கும் நெருங்கிய பழக்கம் இருந்ததும் தெரியவந்துள்ளது. அந்த உறவின் காரணமாக அவர் கர்ப்பமானதாக கூறப்படுகிறது.
கர்ப்பம் குறித்து அறிந்த பிறகு அந்த இளைஞர் தொடர்பைத் துண்டித்ததாகவும், தனது கர்ப்பத்தை குடும்பத்தினரிடமோ, பிறரிடமோ தெரிவிக்காமல் மறைத்து வைத்திருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு குழந்தை பிறந்ததாகவும், திருமணம் நடைபெறாத சூழலில் குழந்தை பிறந்தது வெளியில் தெரிந்தால் குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்படும் என்ற அச்சத்தில், பிறந்த உடனேயே குழந்தையை உயிரிழக்கச் செய்து, தொப்புள் கொடி அறுக்கப்படாத நிலையிலேயே முதியோர் இல்ல வளாகத்தையொட்டிய தென்னந்தோப்பில் வீசியதாக விசாரணையில் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட செவிலியரிடம் காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது அவர் அளித்த விளக்கங்களில் முரண்பாடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், பிரசவத்திற்குப் பிந்தைய உடல்நல பாதிப்பு காரணமாக அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தச் சம்பவம் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், வழக்கின் அனைத்து கோணங்களிலும் காவலர்கள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
betrayal lover death newborn baby cruel act nurse who killed child and threw grove