முட்டை பிரியாணியில் கிடந்த புழு.! ராமநாதபுரத்தில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


முட்டை பிரியாணியில் கிடந்த புழு.! ராமநாதபுரத்தில் பரபரப்பு.!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாரதிநகர் பகுதியில் பிரியாணி கடை ஒன்று உள்ளது. இந்த கடையில் கோயம்புத்தூரைச் சேர்ந்த இரண்டு பேர் முட்டை பிரியாணி சாப்பிட்டுள்ளனர். அப்போது அந்த பிரியாணியில் புழு ஒன்று கிடந்துள்ளது. இதை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

பின்னர் இருவரும் இந்த சம்பவம் தொடர்பாக ஓட்டல் நிர்வாகிகளிடம் கேட்டபோது அவர்கள் முறையான பதிலளிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த இருவரும் ஹோட்டல் நிர்வாகத்திடம் சத்தம் போட்டுள்ளனர். இதற்கிடையே சம்பவம் குறித்து தகவலறிந்த ராமநாதபுரம் உணவு பாதுகாப்பு அலுவலர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர்.

அங்கு புழு கிடந்ததாக கூறப்படும் முட்டை பிரியாணி முழுவதையும் கைப்பற்றி பரிசோதனைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புழுவுடன் இருந்த மீதி பிரியாணியையும் கைப்பற்றினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் அதன் அடிப்படையில் தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near ramanathapuram maggot in egg biriyani


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->