கரூர் : மனைவி பிரிந்து சென்ற வருத்தத்தில் கணவன் செய்த விபரீத முடிவு.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையை அடுத்த வளையல்காரன்புதுார், அண்ணா நகரைச் சேர்ந்தவர் அருண் குமார். இவர் ஒரு கூலி தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த அபிநயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில் இவர்களுக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாட்டின் காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், கோபமடைந்த அபிநயா தாய் வீட்டுக்கு சென்று விட்டார். மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த அருண் குமார் விரக்தியில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அருண்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக அருண்குமாரின் தாயார் தங்க பாப்பா போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near karoor husband suscide for wife separate


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->