அச்சச்சோ...! மலைப்பாதையில் கட்டுப்பாடு இழந்த வாகனம்...! - நேபாளில் 7 இந்தியப் பக்தர்கள் பலி
Vehicle loses control mountain road 7 Indian pilgrims killed Nepal
நேபாளில் ஏற்பட்ட துயரமான சாலை விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 7 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நேபாளில் புகழ்பெற்ற இந்து வழிபாட்டு தலமாக விளங்கும் மனகாமனா கோவில் அருகிலுள்ள காந்தர் என்ற மலைப்பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து நிகழ்ந்தது.

மலைப்பாதையில் இருந்து கீழிறங்கி வந்த மின்சார வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.செங்குத்தான மலைச்சரிவில் பயணித்த அந்த வாகனம் சுமார் 150 முதல் 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில், அதில் இருந்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் காயமடைந்த 7 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலைப்பாதையில் இறங்கும் போது வாகனத்தின் நிறுத்துக் கருவி சரியாக செயல்படாததே இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நேபாளில் நிகழ்ந்த இதே போன்ற மற்றொரு விபத்தில் 27 இந்தியப் பக்தர்கள் உயிரிழந்த சம்பவமும் குறிப்பிடத்தக்கதாகும்.
English Summary
Vehicle loses control mountain road 7 Indian pilgrims killed Nepal