அதிமுகவில் மீண்டும் உட்கட்சி மோதல்? டப்பாடிக்கு செக் வைக்கும் எஸ்பி வேலுமணி! எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சவாலா?
Renewed infighting in the AIADMK SP Velumani checkmates Edappadi A new challenge for Edappadi Palaniswami
அதிமுகவில் மீண்டும் உட்கட்சி பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் செயற்குழு கூட்டத்தை நடத்தி தனது ஆதரவை உறுதிப்படுத்த எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்த நிலையில், அந்த திட்டம் திடீரென தள்ளிவைக்கப்பட்டதாக கூறப்படுவது புதிய அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் வட்டாரங்களில் வெளியாகும் தகவல்களின்படி, அதிமுக மூத்த தலைவர்களான சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் தனியாக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களை நடத்தும் முயற்சியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல்களே எடப்பாடி பழனிசாமி தரப்பில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் பேசப்படுகிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக எதிர்கொண்ட அரசியல் பின்னடைவு, கட்சிக்குள் அதிருப்தியை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் கட்சி சந்தித்த தோல்விகள் மற்றும் முக்கிய தலைவர்களின் விலகல் ஆகியவை கட்சியின் உட்கட்டமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி செயற்குழு கூட்டத்தை கூட்டி தனது தலைமைக்கு ஆதரவை உறுதிப்படுத்த முயன்றதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், சில செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவை எதிர்தரப்பு ஏற்கனவே திரட்டியிருப்பதாக கூறப்படுவதால், அந்த கூட்டம் தொடர்பான திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
மேலும், செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டால் அதை சட்டரீதியாக எதிர்க்கும் நடவடிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாகவே கூட்டத்தை உடனடியாக நடத்தும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
அதேநேரத்தில், செயற்குழு உறுப்பினர்களை தொடர்புகொண்டு, யாரேனும் கையெழுத்து கேட்டால் அவசரப்பட்டு வழங்க வேண்டாம் என்றும், ஏற்கனவே வழங்கியிருந்தால் அதுகுறித்து விளக்கம் அளிக்குமாறும் எடப்பாடி பழனிசாமி தரப்பு வலியுறுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், செயற்குழு கூட்டம் தள்ளிவைக்கப்பட்டதாகவும், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் தனியாக கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் வெளியாகும் தகவல்கள் குறித்து அதிமுக தலைமையோ அல்லது சம்பந்தப்பட்ட தலைவர்களோ அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, இவை அனைத்தும் அரசியல் வட்டாரங்களில் பரவி வரும் தகவல்களின் அடிப்படையிலானவை.
அதிமுகவில் அடுத்தகட்டமாக நடைபெறவுள்ள நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் செயற்குழு தொடர்பான முடிவுகள் கட்சியின் எதிர்கால அரசியல் திசையை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகின்றன. தற்போது நிலவும் சூழலில், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளே அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து தெளிவுபடுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
English Summary
Renewed infighting in the AIADMK SP Velumani checkmates Edappadi A new challenge for Edappadi Palaniswami