ஈரோடு அருகே ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு.! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் உள்ள சித்தோடு அருகே நசியனூரில் அர்ஜுனன் என்பவர் ஓட்டல் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியில் மற்றொருவரும் ஓட்டல் ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இதனால், இருவருக்கும் தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு அர்ஜுனன் வழக்கம்போல் வியாபாரம் முடிந்து ஓட்டலை பூட்டி விட்டு சென்றுள்ளார். இன்று அதிகாலை அர்ஜுனன் ஓட்டல் முன்பு கார் ஒன்று வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய மர்ம நபர் ஓட்டலின் மீது பெட்ரோல் குண்டை வீசி சென்றுள்ளார். 

இதனால், ஓட்டல் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர். அதன் படி, போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 

இருப்பினும், கடையின் முன் பகுதியில் இருந்த இரண்டு குளிர்சாதனப்பெட்டிகள் மற்றும் மேற்கூரை உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தது. மேலும், சம்பவ இடத்திற்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜானகிராமன் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். 

இதையடுத்து, போலீசார் கடையின் முன்பு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தபோது இன்று அதிகாலை மரம் நபர் ஒருவர் காரில் இருந்து இறங்கி வந்து பெட்ரோல் குண்டை ஓட்டல் மீது வீசிய காட்சிகள் பதிவாகி இருந்தது. 

அந்த கட்சியில், அந்த நபரின் முகம் மிகவும் தெளிவாக தெரிந்தது அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியதில், தொழில் போட்டி காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றது என்பது தெரிய வந்தது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

near erode petrol bomb attack on hotel


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->