கடலூரில் பரபரப்பு.! ஒரே வீட்டில் குழந்தைகள் உள்பட மூன்று பேர் தீ வைத்து கொலை.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள செல்லங்குப்பம் வெள்ளிப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்-தமிழரசி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. தமிழரசியின் தங்கை தனலட்சுமி. இவருக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது. 

இந்த நிலையில், தனலட்சுமிக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சனைக் காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதால், நேற்று இரவு தனலட்சுமி அக்கா தமிழரசி வீட்டிற்கு சென்றார். இதையடுத்து, தனலட்சுமியிடம் அவரது கணவர் போனில் தொடர் கொண்டு பேசியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, தனலட்சுமியின் கணவர் நேரடியாக தனலட்சுமியின் அக்கா வீட்டிற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். சிறிது நேரத்தில் அந்த பேச்சுவார்த்தை தகராறாக மாறியது. 

இதில் ஆத்திரமடைந்த தனலட்சுமியின் கணவர் தான் வந்த இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை எடுத்து வீட்டில் இருந்தவர்கள் மீதும் தன மீதும் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். 

அங்கிருந்து புகை வருவதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இந்த தீ விபத்தில் தமிழரசி, குழந்தை ஹாசினி மற்றும் தனலட்சுமியின் ஆறு மாத ஆண் குழந்தை மற்றும் அவருடைய கணவர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

மேலும், தீ விபத்தில் பலத்தக் காயமடைந்த தனலட்சுமி மற்றும் அவரது அம்மா உள்ளிட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து போலீசார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near cuddalore three peoples died for fire


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->